Friday, March 22, 2019

அரசுப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் | நெய்வேலி வடபாதி

நெய்வேலி வடபாதி  : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி வடபாதி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி மூலம் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது.



நெய்வேலி வடபாதி அரசு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 120க்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க முன்னாள் பள்ளி மாணவர்கள்  முயற்சி செய்தது, திருச்சி சோசியல் குவார்டு
 குழுவினரினம் (TSS - Trichy Social Squad ) பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு எடுத்துரைக்கப்பட்டது.




இதனை பாபு நடேசன் அவர்கள் முன்னிலையில் புதுவருட நிகழ்வில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து TSS  குழுவினரின் உதவியுடன் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பள்ளியில் சென்ற மாதம் பொருத்தப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் குடிநீர் முறையாக கிடைக்க, மாணவர்கள் போராடி வரும் நிலையில், அரசுப்பள்ளி ஒன்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருவது பாராட்டத்தக்கது என பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆக்கமும் தொகுப்பும்
பாபு நடேசன்
9739683023

0 comments:

Post a Comment